மருத்துவமனை கொடுப்பனவ
அனுகூலங்கள்

நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவர் ஒருவர் வைத்தியசாலைஅனுமதிக்கப்படும் போது மிகவும் சிரமமான தருணங்களை நீங்கள்எதிர்கொள்வீர்கள். மருத்துவம் பல தசாப்தங்களாக பல மடங்குவளர்ச்சியடைந்துள்ளது. வேண்டியதொரு நோயை குணப்படுத்த பல நவீன மருத்துவ சிகிச்சைகள் தற்போது உள்ளன. மற்றும் சுத்தமான, பாதுகாப்பான மற்றும் ஆடம்பரமான வைத்தியசாலைகளும் சேவைகளை பெற்றுக் கொள்ள உள்ளன. எவ்வாறாயினும் வைத்தியசாலை கட்டணங்களுக்கான செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் எவ்வாறான செலவுகள் ஏற்படும் என்பதை எதிர்வு கூற முடியாமல் இருப்பதால் உங்களுக்கு பக்கபலம் ஒன்று இருப்பது நல்லதாகும். குடும்ப வைத்தியசாலை கொடுப்பனவு அனுகூலம் ஊடாக உங்களையும் மிகவும் நெருங்கிய உங்களின் அன்பிற்குரியவர்களையும் அவ்வாறான நிலையில் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.

எவ்வாறு செயற்படுகின்றது

குடும்ப வைத்தியசாலை பண அனுகூலத்தினை சகல செலிங்கோ லைஃப் காப்புறுதி திட்டங்களுடனும் இணைத்துப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வயது, தவணை காலம் மற்றும் உங்கள் உடல் நிலை உட்பட ஏனைய பிரிவுகளுக்கு அமைய கட்டுப்பண தொகை சேர்க்கப்படும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது நாளாந்த பண அனுகூலமாக ரூ. 15,000 வரையான தொகை பெறுவீர்கள். இந்த அனுகூலம் ஆண்டின் 365 நாளும் உங்களை பாதுகாக்கும்.

 

அனுகூலங்கள்

முழு ஆயுள் காப்புறுதி பெறுமதியின் 01% காப்புறுதியை அதிகபட்சமாக ரூ. 15000 வரை நீங்கள் பெறுவீர்கள். அத்துடன் வருடாந்தம் அதிகரிக்கப்படும் 5% ஆரம்ப உத்தரவாத தொகைக்கு ஏற்ப இத்திட்டம் பணவீக்கத்துடன் சரிசெய்யப்படும். மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 5000 மேலதிக நாளாந்தக் கொடுப்பனவை பெறுவீர்கள். ஒவ்வொரு மகப்பேற்று காலத்திலும் 7 நாட்களுக்கு மகப்பேறு நன்மை வழங்கப்படும்.