எதிர்கால சேமிப்பான்

செலிங்கோ லைஃப் எதிர்கால சேமிப்பான் மூலம் உங்கள் இலக்குகளை அடைந்துகொள்ளும் எதிர்காலத்திற்காகத் தயாராக இருங்கள். இந்தப் பிரத்தியேகமான காப்புறுதித் திட்டம் மன அமைதி மற்றும் வளமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும். எதிர்கால சேமிப்பான் திட்டம் உங்கள் எதிர்கால இலக்குகளைத் திட்டமிடுவதற்குத் தாராளமான வருமானத்துடன் ஏராளமான செல்வத்தையும் உருவாக்க உதவுகிறது.  உங்கள் அன்புக்குரியவர்களை நிச்சயமற்ற நிலைகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க இது வலுவான பாதுகாப்பையும் வழங்குகிறது. அனைத்திற்கும் மேலாக, எதிர்கால சேமிப்பான் இந்த விலைமதிப்பற்ற, நீண்ட கால அனுகூலங்களை நீண்ட கால செலவுகள் இன்றி வழங்குகிறது. உங்கள் நிதி ஸ்திரத்தன்மை உச்சத்தில் இருக்கும்போது, ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் நீங்கள் சிரத்தையுடன் சேமிக்க வேண்டும்

நாம் உங்களுக்கு வழங்குவது

குறுகிய கால அர்ப்பணிப்புக்கு நீண்ட கால பாதுகாப்பு

உங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், 10, 15, 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு காப்புறுதி மூலம் பாதுகாக்கப்படுவதற்கு, 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு மட்டுமே தவணைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது.

 

முதிர்ச்சியின் போது கவர்ச்சிகரமான மொத்த தொகையை உறுதி செய்வதோடு, செல்வமும் வளர்ச்சியடைகிறது.

நீங்கள் செலுத்தும் அடிப்படை தவணைத் தொகைக்கு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட மாதாந்த ஈவுத்தொகை விகிதங்களில் கட்டமைக்கப்பட்டு, வளர்ந்து வரும் செல்வத்தை எதிர்கால சேமிப்பான் உறுதி செய்கிறது. இந்த நிதிக் கூறு உங்கள் எதிர்கால இலக்குகளான ஓய்வூதியம், குழந்தைகளின் கல்வி அல்லது வேறு ஏதேனும் தேவையை அடைந்துகொள்வதற்கு முதிர்ச்சியின் போது, கவர்ச்சிகரமான நிதியை உருவாக்க உதவும். நீங்கள் நிதிக்கு உங்கள் சொந்த பங்களிப்பை (அடிப்படை தவணைத் தொகை) முடிவு செய்து, ஒப்புக்கொள்ளப்பட்ட தவணைத் தொகை செலுத்தும் காலத்திற்கு மாதாந்த, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை நிதியை உருவாக்கத் தொடங்கலாம்.

ஆயுள் பாதுகாப்பு அனுகூலம்

 

நீங்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உறுதிசெய்யும் சிறந்த கொடுப்பனவுகளுடன் கூடிய ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவீர்கள். காப்பீட்டுக் காலப்பகுதியில் நீங்கள் உயிரிழக்க நேரிட்டால்உங்கள் பயனாளிகள் பின்வரும் அனுகூலங்களைப் பெறுவார்கள்:

  • ஆயுள் காப்பீடு (அடிப்படை உத்தரவாதத் தொகை + குடும்ப பாதுகாப்பு அனுகூலம்)
  • பிரீமியம் உத்தரவாத அனுகூலம்
  • முதிர்வுத் திகதியில் மொத்த தொகையைச் செலுத்துதல்

 

பிரீமியம் உத்தரவாத அனுகூலம்

உங்களுக்கு துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், செலிங்கோ லைஃப் பிரீமியம் தவணைத் தொகை செலுத்தும் காலம் முடியும் வரை உங்கள் செல்வ நிதியத்திற்கான அடிப்படை தவணைத் தொகையைச் செலுத்துவது தொடரும் அதேவேளை, நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக அந்த நிதியைக் கட்டும். உங்களுக்கு முழுமையாக மற்றும் நிரந்தர ஊனம் ஏற்பட்டால், நிறுவனம் உங்கள் அடிப்படை தவணைத் தொகை மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான தொகை என்பவற்றை பிரீமியம் செலுத்த வேண்டிய காலம் முடியும் வரை தொடரும்.

 

லோயல்டி வெகுமதிகள்

நீங்கள் சரியான நேரத்தில் தவணைத் தொகைகளைச் செலுத்துவது உங்களின் தொடர்ச்சியான நிதியியல் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. இது காப்பீட்டுக் காலத்தின் போது குறிப்பிட்ட இடைவெளியில் உங்கள் நிதியில் சேர்க்கப்படும் லோயல்டி வெகுமதிகள் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது. இது முதிர்ச்சியின் போது நீங்கள் கவர்ச்சிகரமான செல்வ நிதியைப் பெறுவதற்கான மற்றொரு வழியும் கூட. எவ்வாறாயினும், இறுதித் திகதியிலிருந்து 180 நாட்களுக்குள் நீங்கள் தவணைத் தொகைகளைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், எதிர்கால லோயல்டி வெகுமதிகள் அனைத்தையும் நீங்கள் இழக்க நேரிடும். இது முதிர்ச்சியின் போது உங்கள் வருவாயில் இருந்து அதிகபட்சமாக 50% – 80% வரை குறைக்கக் கூடும்.

முதிர்வுக்குப் பின்னரான லைஃப்லைன் கட்டண செலுத்துதல்களின் அனுகூலங்கள்

உங்களின் எதிர்காலத் தேவைகளுக்காக (மருத்துவம், ஓய்வூதியம் போன்றன) அவசரமாக நிதியைப் பராமரிக்க வேண்டியிருந்தால், காப்பீடு முதிர்ச்சியடைந்த பின்னரும், இன்னும் 20 ஆண்டுகள் வரை நிதியை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். முதிர்வு மதிப்பைப் பெறாமல், முதிர்ச்சியின் போது லைஃப்லைன் கட்டண செலுத்தல்களின் அனுகூலங்களை நீங்கள் தேர்வுசெய்தால், நிறுவனம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு வரம்பற்ற பிந்தைய திரும்பப் பெறுதல்களை அனுமதிக்கிறது. வாழ்க்கையில் எந்தவொரு அவசரநிலையிலும் உங்களுக்கு தேவைப்படும் போது இந்த நிதிகளை நீங்கள் பயன்படுத்த முடியும். இந்தக் கால கட்டத்தில் நிறுவனமானது, உங்கள் நிதிக்கு ஈவுத்தொகையைத் தொடர்ச்சியாக வரவு வைக்கும்.

செல்வ நிதியத்தின் வளர்ச்சி?

உங்கள் செல்வ நிதியத்தின் தொழில்முறை முதலீட்டு

முகாமையாளர்களால் கவனமாக நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு மாதமும் உங்கள் வெல்த் ஃபண்ட் வளர்ச்சியடைவதை உறுதிசெய்யும் அதேநேரம், இறுதியில் கவர்ச்சிகரமான முதிர்ச்சியையும் உறுதி செய்வார்கள்.

செல்வ நிதிய முதிர்வு அனுகூலங்களுக்கான உதாரணம்:

 

  • வயது: 35 வருடங்கள்

  • தவணைத் தொகை செலுத்தும் காலம்: 5 ஆண்டுகள்

  • திட்ட காலம்: 20 ஆண்டுகள்

  • தவணைத் தொகை செலுத்தும் முறை: ஆண்டு

செல்வ நிதியத்திற்கான வருடாந்த அடிப்படை தவணைத் தொகை மற்றும் உறுதி செய்யப்பட்ட அடிப்படைத் தொகைமொத்த லோயல்டி வெகுமதிகள் (ரூ.) செலுத்த வேண்டிய அனைத்து தவணைத் தொகைகளையும் (ரூ.) செலுத்தி, 20 ஆண்டுகளின் முடிவில் திரும்பப் பெறுங்கள்
4%8%12%
200,0001,350,0002,846,5834,413,7357,239,924
500,0003,375,0007,149,23411,079,77618,164,903
1,000,0006,750,00014,320,31822,189,84436,373,201

வருடத்திற்கான அனைத்து நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் அனைத்து பிரீமியங்களும் அந்தந்த நிலுவைத் திகதிகளில் செலுத்தப்பட்ட பின்னர் வருடாந்தம் 4%, 7% மற்றும் 12% என்ற அனுமான ஈவுத்தொகை விகிதங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உதாரணம் மட்டுமே மேலே காட்டப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட ஈவுத்தொகை விகிதங்கள் உத்தரவாதமளிக்கப்படவில்லை என்பதோடு, நடைமுறையில் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப, ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டதாகும். மேலும், நிறுவனம் செலுத்தும் உண்மையான முதிர்வு அனுகூலம் அறிவிக்கப்பட்ட உண்மையான ஈவுத்தொகை விகிதங்களைப் பொறுத்ததே ஆகும். நீங்கள் தேர்ந்தெடுத்த பிரீமியம் கட்டண முறையின் அடிப்படையில், மேலே விளக்கப்பட்ட மதிப்புகள் மாறும் என்பதையும் கருத்திற்கொள்க. (உதாரணமாக, அரை வருட, காலாண்டு மற்றும் மாதாந்த அடிப்படையில்).

பாதுகாப்பு அனுகூலத்திற்கான உதாரணம்:

உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அனுகூலங்கள்
விளக்கம்

ஆயுள் காப்பீடு

 

உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படைத் தொகை + குடும்பப் பாதுகாப்பு அனுகூலம்

(காப்பீட்டுத் தொகையை ஆயுள் காப்பீட்டாளர் முடிவு செய்யலாம்)

உத்தரவாதமளிக்கப்பட்ட பிரீமியம் அனுகூலங்கள் (PAB)

பிரதான ஆயுள் காப்பீட்டாளரின் மரணம் அல்லது முழுமையான நிரந்தர ஊனத்தின் போது, தவணைக் கட்டணங்கள் செலுத்துவது தள்ளுபடி செய்யப்படும். எனினும், செல்வ நிதியத்தின் வளர்ச்சி தொடரும்.

கூடுதல் நன்மைகள்

சப்ளிமெண்டரி பெனிபிட் ரைடர்களை சேர்க்கும் திறன்

உங்கள் விருப்பத்தின் அடிப்படையில், வாழ்நாள் முழுவதும் உங்களின் பாதுகாப்புப் பலன்களைப் பெருக்க, பின்வரும் குறுகிய கால பிரீமியம் செலுத்தும் துணைப் பயன் ரைடர்களைத் தேர்வுசெய்ய இந்தத் திட்டம் உங்களை அனுமதிக்கிறது.

  • விபத்து மரண பலன்
  • மொத்த மற்றும் நிரந்தர ஊனமுற்றோர் பயன்
  • தீவிர நோய் நன்மை
  • உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான கவர்

திரும்பப் பெறுதல் நன்மை

மூன்றாவது பாலிசி ஆண்டிற்குப் பிறகு, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், பாலிசி காலத்தில் இரண்டு முறை சொத்து நிதியில் 10% வரை திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.

செலிங்கோ லைஃப் பாலிசிதாரர்களுக்கான சிறப்பு வெகுமதிகள்

செலிங்கோ லைஃப் வழங்கும் ‘பிரணாம புலமைப்பரிசில்கள் மற்றும் குடும்ப சவாரி’ போன்ற பல்வேறு சிறப்பு வெகுமதி திட்டங்களுக்கு நீங்கள் மேலும் தகுதி பெற்றுள்ளீர்கள்.