செலிங்கோ லைஃப் ஸ்மார்ட் பாதுகாப்பு

செலிங்கோ லைஃப் ஸ்மார்ட் பாதுகாப்புத் திட்டமானது, இலங்கை ஆயுள் காப்புறுதித் துறைக்கு நாம் அறிமுகப்படுத்திய ஒரு புதுமையான தயாரிப்பு ஆகும்.

 காப்புறுதிச் சந்தையில் உள்ள ஏனைய தயாரிப்புகளைப் போலல்லாமல், ஸ்மார்ட் பாதுகாப்பு, உங்களுக்கு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் போது, உங்கள் அன்புக்குரியவர்கள் விரிவான காப்புறுதியைப் பெறுவதை உறுதிசெய்கிறது. மேலும் அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்வதற்கான அடித்தளம் அவர்களுக்குக் கிடைப்பதையும் உறுதிசெய்கிறது. உங்கள் காப்புறுதித் திட்டம் முதிர்ச்சியடையும் பட்சத்தில், நீங்கள் செலுத்திய மொத்த கொடுப்பனவுகளின் முழுப் பணத்தையும், காப்பீட்டுத் தொகையையும் திரும்பப் பெறுவீர்கள். எனவே முதிர்வுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

எவ்வாறு செயற்படுகின்றது

ஸ்மார்ட் பாதுகாப்பு உங்கள் குடும்பத்திற்கான பாதுகாப்பு மற்றும் முதிர்ச்சியின் போது கவர்ச்சிகரமான வருமானம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது.

 

பாதுகாப்பு அனுகூலங்கள்

உங்கள் அன்புக்குரியவர்களுக்கான பாதுகாப்பு இன்றியமையாதது. ஸ்மார்ட் பாதுகாப்பு இந்தத் தேவைக்கு முன்னுரிமை அளிப்பதோடு, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இணையற்ற பாதுகாப்பையும் வழங்குகிறது.

 

  • காப்பீட்டுத் தொகையின் 8 மடங்கு ஆயுள் காப்புறுதித் தொகையாக வழங்கப்படும்.
  • ஆயுள் காப்புறுதி ஒவ்வொரு ஆண்டும் 2.5% ஆல் அதிகரிக்கிறது (ஒவ்வொரு காப்புறுதித் திட்ட ஆண்டும் முடிந்ததும்).

உதாரணம்: 

காப்புறுதி உரிமையாளர் ரூ. 1,000,000 பெறுமதியான காப்பீட்டுத் தொகையுடனான காப்புறுதியைப் பெற்று, திட்டத்தின் 1வது ஆண்டில் துரதிஷ்டவசமான சூழ்நிலையொன்றை எதிர்கொண்டால், அவரது அன்புக்குரியவர்கள் ரூ. 8,000,000 ஐ ஆயுள் காப்பீடாகப் பெற்றுக்கொள்வார்கள்.

 

ஒரு வேளை, அவர்களது 5வது திட்ட ஆண்டில் உயிரிழந்தால், அன்புக்குரியவர்கள் ரூ.8,800,000 ஐ ஆயுள் காப்பீடாகப் பெற்றுக்கொள்வார்கள்.

யாரால் விண்ணப்பிக்க முடியும்

18-60 வயதிற்கு இடைப்பட்ட எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தினை 10, 15, 20, 25 அல்லது 30 வருட காலத்திற்கு பெற்றுக்கொள்ளத் தகுதி பெறுகின்னர்.

கட்டணம் செலுத்தும் முறை

இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்

அனுகூலங்கள்

ஸ்மார்ட் பாதுகாப்பு என்பது ஆயுள் காப்பீடு மாத்திரமன்றி, சிறந்த முதலீடும் ஆகும். ஏனெனில் அதன் மூலம் முதிர்ச்சியின் போது அதிக வருமான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

 

  • நீங்கள் செலுத்திய அனைத்து கொடுப்பனவுகளின் முழுத் தொகையும் + உறுதியளிக்கப்பட்ட தொகை என்பன முதிர்ச்சியின் போது செலுத்தப்படும் (உத்தரவாதம்).

எனவே நீங்கள் முதிர்ச்சியின் போது செலுத்தியதை விட அதிகமானதை திரும்பப் பெறுவீர்கள் என்பதை ஸ்மார்ட் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது!

மேலதிக அனுகூலங்கள்

செலிங்கோ லைஃப் ஸ்மார்ட் பாதுகாப்பு உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளைப் பெறத் தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகளும் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.