சுப்ரீம்
உங்களை இன்று இந்த நிலைக்கு உயர்த்தியது உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தான். எனினும், எதிர்காலத்தை தூரநோக்குடன் நோக்குவதும் புதிய வாய்ப்புகளை இனங்கண்டு, வெற்றியின் உச்ச சிகரத்தை அடைவதும் முக்கியமாகும்.
உங்களின் தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் உங்கள் எதிர்பார்ப்பு மற்றும் கனவுகளுக்கு அப்பாற்பட்ட வெற்றியை அடைய சிறந்த திட்டமிடல் அவசியம். செலிங்கோ லைஃப் சுப்ரீம் உங்கள் எல்லைக்கும் அப்பாற்பட்ட வெற்றியை பெற்றுக் கொள்ளவதற்கு திட்டமிட சிறந்த மைல்கல்லாகும்.
எவ்வாறு செயற்படுகின்றது
காப்புறுதி காலத்தில் உரிமையாளருக்கு குறிப்பிடத்தக்க பணத்தொகையை காலத்திற்கு காலம் செலுத்தும் விசேட சிறப்பை சுப்ரீம் லைஃப் திட்டம் கொண்டுள்ளது. மேலும் ஆயுள் காப்புறுதி ஒன்றும் வழங்கப்படுவதுடன், காப்பீட்டு கால இறுதியில் உரிமையாளர் உயிருடன் இருக்கும் பட்சத்தில் முதிர்வு அனுகூலமும் வழங்கப்படும்.
அனுகூலங்கள்
இந்தத் திட்டம் மூன்று வகையான அனுகூலங்களைக் கொண்டது.
நீங்கள் சுப்ரீம் லைஃப் திட்டத்தினை கொள்வனவு செய்த பின்னர், குறிப்பிடத்தக்க ஒரு தொகைப் பணத்தை 04 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற தவணைக் காலத்தில் பெற்றுக்கொண்டு, உங்களது நிதித் தேவைகளை பூர்த்திசெய்து, எதிர்காலத்தை வெற்றிக்கொள்வதற்காகப் பயன்படுத்த முடியும்.
தவணைக் காலத்தின் முடிவில், காப்புறுதி உரிமையாளர் உத்தரவாதம் அளிக்கப்பட்ட காப்பீட்டு தொகை அல்லது திரண்ட நிதியத் தொகை என இரண்டில் எது அதிகமோ, அதனை முன்னர் செலுத்தப்பட்ட தொகை கழிக்கப்படாமல் பெற்றுக்கொள்ளும் மேலதிக அனுகூலத்தை பெறுவார்.
மேலும், இதனுடன் சேர்ந்த ஆயுள் காப்புறுதியும் வழங்கப்படுவதால், காப்புறுதி உரிமையாளருக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால், உத்தரவாதம் அளிக்கப்பட்ட காப்பீட்டு தொகை அல்லது திரண்ட நிதியத் தொகை என இரண்டில் எது அதிகமோ அதனை முன்னர் செலுத்தப்பட்ட தொகை கழிக்கப்படாமல் பயனாளருக்கு வழங்கப்படும்.
உதாரணம்:
நீங்கள் 30 வயதுடையவராக இருந்து, ரூ. 500,000 அடிப்படை காப்புறுதித் தொகைக்கு செலிங்கோ லைஃப் சுப்ரீம் காப்புறுதியை 20 ஆண்டுகளுக்கு பெற்றுக்கொள்வீர்கள் எனின், ஒவ்வொரு 04 ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் ரூ. 60,000 தவணைக் காலத் தொகையைப் பெறுவீர்கள்.
காலம் |
அவ்வப்போது செலுத்தும் பணம் (இறுதியில்) |
உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை %த்தில் |
---|---|---|
12 ஆண்டுகள் |
4வது ஆண்டு |
20% |
16 ஆண்டுகள் |
4வது ஆண்டு |
15% |
20 ஆண்டுகள் |
4வது ஆண்டு |
12% |
24 ஆண்டுகள் |
4வது ஆண்டு |
10% |
-20ஆண்டு இறுதியில் முதிர்வில் உங்கள் திரண்ட நிதியத்தின் மிகுதி ரூ. 500,000 – உத்தரவாத தொகை தொள்கை
-வருடாந்தம் 7% பங்குலாபமாக அனுமாணிக்கப்படும் முதிர்வு அனுகூலம் ரூ. 950,000
-வருடாந்தம் 9% பங்குலாபமாக அனுமாணிக்கப்படும் முதிர்வு
-அனுகூலம் ரூ.1,180,000
யாரால் விண்ணப்பிக்க முடியும்
18- 58 வயதிற்கு இடைப்பட்ட ஆண்கள் அனைவரும் இந்த திட்டத்தினை 12,16, 20 மற்றும் 24 ஆண்டு காலத்திற்கு பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள்.
கட்டணம் செலுத்தும் முறை
இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கான கட்டுப்பணத்தினை மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் செலுத்த முடியும்.
மேலதிக தெரிவு அனுகூலங்கள்
உங்கள் ஆயுள் காப்புறுதித் திட்டத்தில் பின்வரும் தெரிவுகளை மேலதிக பாதுகாப்பிற்காக இணைத்துக்கொள்ள முடியும்.
- செலிங்கோ லைஃப் ஃபெமிலி ப்ரொட்டெக்க்ஷன் பெனிபிட்
- செலிங்கோ லைஃப் ஜீவயாத்ரா
- செலிங்கோ லைஃப் யுகதிவி
- செலிங்கோ லைஃப் ஃபெமிலி இன்கம் பெனிபிட்
- செலிங்கோ லைஃப் ஃபெமிலி திகாசிறி
- செலிங்கோ லைஃப் மேஜர் செர்ஜெரி
- செலிங்கோ லைஃப் ஃபெமிலி ஹாஸ்பிடல் கேஷ்
- செலிங்கோ லைஃப் எக்ஸ்ட்ரா கவர்
- செலிங்கோ லைஃப் ஹெல்த் சப்போட் ப்லஸ்
மேலதிக அனுகூலங்கள்
செலிங்கோ சுப்ரீம் லைஃப் உரிமையாளர்கள் தமது விசுவாசத்திற்காக மேலதிக வெகுமதிகளைப் பெறத் தகுதி பெறுவார்கள். சகல காப்புறுதி உரிமையாளர்களும் செலிங்கோ ஃபெமிலி சவாரி வாடிக்கையாளர் ஊக்குவிப்பில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகளும் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.