தொழில்ரீதியாக பட்டயக்கணக்காளரான திரு. R. ரெங்கநாதன் நிறுவனத்தில் அதன் தொடக்கத்தில் இணைந்தார். இன்று செலிங்கோ லைஃப் இன்சூரன்ஸ் லிமிற்றெட் இன் நிறைவேற்றுத் தலைவராக வெற்றிகரமாக தலைமை தாங்குகின்றார்.
1988 ஆயுள் காப்புறுதி செயற்பாடுகளின் ஆரம்பம் முதல் இணைந்திருக்கும் இவர் இது தனியார் மயப்படுத்தப்பட்டது தொடக்கம் இலங்கையின் சகல இல்லங்களுக்கும் ஆயுள் காப்புறுதி சென்றடைய வேண்டும் எனும் இலக்குடன் செயற்படுகின்றார். அதற்கமைய இலங்கையில் காப்புறுதி செய்யப்பட வேண்டிய மக்களை சென்றடையும் வகையில் பல்வேறு நவீன மற்றும் சேவைகளை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அறிமுகம் செய்துள்ளார். இவர் செலிங்கோ லைஃப் நிறுவனம் 01 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி அளிக்கும் ஆற்றலை உருவாக்கினார்.
இவரின் நிதிசார் எதிர்வுகூறல்கள் மற்றும் திட்டமிடல்கள் காரணமாக செலிங்கோ லைஃப் நிதியத்தின் ஆயுள் நிதியம் ரூ. 88 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. இந்த சாதனையை எட்ட 31 ஆண்டுகளேயானது சிறப்பாகும். அவரும் அவரின் நிர்வாக அணியுமே செலிங்கோ லைஃப் இலங்கை ஆயுள் காப்புறுதிச் சந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்தர இடத்தை தொடர்ச்சியாக தக்க வைப்பதற்கு காரணமாகும்.
செலிங்கோ லைஃப் துணை நிறுவனமான செலிங்கோ ஹெல்த்கேயார் சேர்விஸ் லிமிற்றெட். அதிநவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றது. ஓய்வூதியத்தின் பின்னரும் செயற்பாட்டிலுள்ளவர்களுக்காக “வீட்டுக்கு வெளியே ஒரு வீடு” செயற்திட்டத்தை அதன் துணை நிறுவனங்களில் திரு ரங்கநாதன் செயற்படுத்தியுள்ளார். கொழும்பில் இருந்து வெறும் 9 மைல் தொலைவிலுள்ள உஸ்வெட்டிகெய்யாவையில் அமைந்துள்ள ஆடம்பரமான “லா செரினா” வயதான மக்களுக்கு சேவை செய்ய இப்போது தயாராக உள்ளது.